வீரவநல்லூர்: வீரவநல்லூர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.வீரவநல்லூர் செண்பகவல்லி அம்பாள் சமேத விக்கிரமபாண்டீஸ்வரர் கோயிலில் 2வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. விழா நாளன்று காலை கணபதி அனுக்ஞை, சுவாமி, அம்பாள் ஸ்தபன கும்ப பூஜை, சகல தேவதா ஹோமம் ஆகியன நடந்தது. தொடர்ந்து சிவனடியார்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட திருமுறை ஓதுதல், வீதி ஊர்வலம் ஆகியன நடந்தது.மதியம் மகா அபிஷேகம், கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு சமய சொற்பொழிவு, சிறப்பு தீபாராதனைக்கு பின் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை அப்பர் உழவாரப்பணி மன்றம், பிரதோஷ, பவுர்ணமி வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.