Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் ... தென்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் தைப்பூச விழா தென்சேரிமலை மந்திரகிரி வேலாயுத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யாவாடி மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் விமான பாலஸ்தாபனம்
எழுத்தின் அளவு:
அய்யாவாடி மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் விமான பாலஸ்தாபனம்

பதிவு செய்த நாள்

05 பிப்
2023
09:02

மயிலாடுதுறை: கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோவில் விமான பால ஸ்தாபனம் இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யாவாடி கிராமத்தில் தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரசித்தி பெற்ற மகா பிரத்தியங்கரா தேவி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். எட்டு திக்கும் மயானத்தால் சூழப்பட்ட இத்தலத்தில் ராவணன் மகன் மேகநாதன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் பிரத்தியங்கிரா தேவியை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றது ஐதீகம். இந்தக் கோவில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டு மகா பிரத்தியங்கரா தேவியை மனமுருக பிரார்த்தித்தால் எதிரிகள் தொல்லை நீங்கி  சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்க உள்ளதை முன்னிட்டு இன்று காலை கோவில் விமான பாலஸ்தாபனம் நடைபெற்றது. இதனை ஒட்டி கோவில் மண்டபத்தில் 9 விமானங்களுக்கு 9  கலசங்கள் வைக்கப்பட்டு, அகஸ்தீஸ்வரர், தர்ம சம்வர்த்தினி, பிரித்திங்கரா தேவி  மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு நான்கு யாகக் குண்டங்கள் அமைக்கப்பட்டு இரண்டு கால சிறப்பு யாகம் நடத்தப்பட்டு அத்தி மரத்தினால் ஆன விமான சித்திரங்களில் ஆவாகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருப்பணி முகூர்த்தம்  செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. பாலஸ்தாபன பூஜைகளை கோவில் அர்ச்சகர் தண்டபாணி சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டதை முன்னிட்டு கும்பாபிஷேகம் முடியும் வரை அமாவாசை அன்று நடத்தப்படும் நிகும்பலாயகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar