பேய்க்குளம்: பேய்க்குளம் அருகே மேலபனைக்குளம் சபை தூய திருத்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை நடக்கிறது.பேய்க்குளம் அருகே ஆசீர்வாதபுரம் சேகரத்திற்குட்பட்ட மேலபனைக்குளம் சபை தூய திருத்துவ ஆலய நற்செய்தி பெருவிழா, ஆலய பிரதிஷ்டை பண்டிகை, அசனபண்டிகை மற்றும் பள்ளி ஆண்டுவிழா கடந்த 4ம் தேதி செவ்வாய்கிழமை துவங்கியது. 5ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு நாசரேத் சாமுவேல் பாலன் தலைமையில் ஆவிக்குரிய பொதுக்கூட்டம் நடந்தது. 6ம் தேதி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு பண்டிகை ஆயத்த ஆராதனையும், இரவு 8 மணிக்கு பள்ளி மாணவ, மாணவியரின் பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. 7ம் தேதி காலையில் ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை, திருவிருந்து ஆராதனை ஆசீர்வாதம் சேகர தலைவர் தேவராஜன் தலைமையில் நடக்கிறது. பகல் 2 மணிக்கு காணிக்கை மற்றும் பரி.ஞானஸ்நான ஆராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு பஜனை பிரசங்கம் நடக்கிறது. 8ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு அசன ஆயத்த ஆராதனையும், மாலை 6 மணிக்கு அசனவிருந்தும் நடக்கிறது. ஏற்பாடுகளை மேலபனைக்குளம் சபையினர் செய்து வருகிறார்கள்.