Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூரில் மாசி தெப்ப ... பொள்ளாச்சி கோவில்களில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷாவில் மஹா சிவராத்திரி : ஆன்லைன் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம்
எழுத்தின் அளவு:
ஈஷாவில் மஹா சிவராத்திரி : ஆன்லைன் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம்

பதிவு செய்த நாள்

10 பிப்
2023
05:02

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில், இலவசமாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, ஈஷா அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா, வரும் பிப்ரவரி 18ம் தேதி மாலை, 6:00 மணி முதல் மறுநாள் காலை, 6:00 மணி வரை ஆதியோகி முன்பு மிகச்சிறப்பாக நடக்க உள்ளது. இவ்விழாவில் நேரில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் https://isha.co/msr23-tn என்ற லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இலவசமாக பங்கேற்க விரும்புபவர்கள் தாமிரபரணி என்ற பிரிவை தேர்வு செய்து பெயர், மொபைல்போன் எண், இமெயில் முகவரி போன்றவற்றை பதிவிட்டு முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த முன்பதிவு நடைபெறும். முன்பதிவு செய்த பின், விழாவில் பங்கேற்பதற்கான இ-பாஸ், பதிவு செய்தவர்களின் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பிப்ரவரி 18ம் தேதி, ஈஷாவிற்கு வரும்போது, மலைவாசல் அருகே இருக்கும் நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில், இந்த இ-பாஸை காண்பித்து, நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்விழா, மாலை 6:00 மணிக்கு தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் துவங்கும். இதில், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, சக்தி வாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன், விடிய விடிய விழா களைகட்ட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar