திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில், திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பூஜை செய்தனர். திருவிளக்கு பூஜையில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.