நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆண்டுத் திருவிழா ஆக., 29ல் துவங்கியது. தினமும் மதியம் 12 மணிக்கு தேவாலய முகப்பில் கொடியேற்றப்பட்டு, தேவாலய மேல், கீழ் ஆலயங்களில் பல்வேறு மொழிகளில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசிர்வாதம், மாதாவின் திருத்தேர் பவனி நடந்தன. நேற்றிரவு, தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் 20 பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டுப்பாடல் திருப்பலியும், பெரிய சப்பர பவனியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு பேராலய வளாகத்தில் ஏற்றப்பட்டிருக்கும் மாதாவின் உருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.