Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடராஜரை’ கொண்டாடும் ஈஷா ... ஆதியோகி ரதம் கோவை வருகை பக்தர்கள் வரவேற்பு ஆதியோகி ரதம் கோவை வருகை பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

14 பிப்
2023
03:02

காளஹஸ்தி: காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாற்றங்கள் பல்வேறு புதுமைகளை கோயில் நிர்வாகம் நடத்தி வருகின்றன. இந்த ஆண்டும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் விழா இன்று சிவன் கோயில் முன் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

நடக்கும் 13 நாட்களிளும் தினந்தோறும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் ஊர்வலம் நடப்பதால் நகரை அழகுப் படுத்தியுள்ளனர்.ஊர்வலத்தின் போது முன்னதாக சாலைகளை தூய்மை படுத்தப்பட்டு தண்ணீரை தெளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர் . ஆனால்  கோயிலில் மூலவரின் சேவையை விட உற்சவமூர்த்திகள் சேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறலாம். இந்நிலையில் கோயிலில் நடக்கும் ருத்ராபிஷேகம், பஞ்சாமிருத்த அபிஷேகம், பால் அபிஷேகம், பச்சை கற்பூர அபிஷேகத்தில் ஈடுபடுவதை ரத்து செய்யப்படுவதோடு கோயிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும்  கோயில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகிறது .வழக்கமாக பிரம்மோற்சவத்தின் போது இரண்டு சமயங்களிலும் சுவாமி அம்மையார்கள் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அச்சமயத்தில் பக்தர்களை அபிஷேகங்களில் அனுமதித்தால் கால நிர்வாகம் செய்ய இயலாது என்பதால் கோயில் சார்பில்  மட்டுமே நடத்தப்படுகிறது. இதனை பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்று கோரினார்.  கோயிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ சமயத்தில் ரத்து செய்வது வழக்கம்.ஆனால் பக்தர்கள் மிகவும் பக்தி  பாவத்துடன் ஈடுபடும் ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகள் வழக்கம் போல் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் நடக்கும் என்றும் இப்பூஜைகள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் இதனை பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar