பதிவு செய்த நாள்
08
செப்
2012
11:09
கீழக்கரை: கொம்பூதியில் 29ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா, இன்று துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. காலை 7 மணிக்கு கிராம தேவதைகள் வழிபாட்டை தொடர்ந்து, விநாயகர் கோயிலில் இருந்து 108 பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், சமுதாய கொடி ஏற்றுகிறார். இதையடுத்து விளையாட்டு போட்டிகள், கிராமிய கலை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு சந்தன காப்பு, 12 மணிக்கு கண்ணபிரான் பிறந்த நாளையொட்டி விசேஷ, அபிஷேக ஆராதனை நடக்கிது. நாளை மஞ்சள் நீராட்டுவிழா, கயிறு இழுக்கும் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், கண்ணபிரான் அழைப்பு, மதியம் 2 மணிக்கு உறியடி உற்சவம், இரவு 10 மணிக்கு கலை நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை சென்னை வெங்கடேஸ்வரி அறக்கட்டளை நிறுவனர் ஏ.எம்.செல்வராஜ் ஆலோசனையின் பேரில், விழா கமிட்டியாளர்கள், யாதவர் சங்கம், இளைஞர் சங்கம், மகளிர் மன்றத்தினர் செய்து வருகின்றனர்.