Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் கால பைரவருக்கு முத்தங்கி ... ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் பாசிகள் : பக்தர்கள் அருவெருப்பு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் மகாசிவராத்திரி வழிபாடு: பக்தர்கள் இரவு நேர தரிசனத்திற்கு அனுமதி
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் மகாசிவராத்திரி வழிபாடு: பக்தர்கள் இரவு நேர தரிசனத்திற்கு அனுமதி

பதிவு செய்த நாள்

15 பிப்
2023
04:02

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்.18 மாலை முதல் மறுநாள் காலை வரை நடக்கும் இரவு நேர நான்கு கால பூஜையை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இக்கோயிலில் பவுர்ணமி மற்றும் அமாவாசையை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். எதிர்பாராத வகையில் மழை பெய்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்ற அறிவிப்பை வனத்துறை தெரிவிக்கும். இந்நிலையில் தற்போது மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 18 முதல் 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் சுவாமி தரிசனம் செய்தவுடன் மலை அடிவாரம் திரும்ப அறிவுறுத்தப்படும். தற்போது பிப்.18 அன்று மாலை 6:00 மணி முதல் மறுநாள் பிப்ரவரி 19 காலை 6:00 மணி வரை மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாசி அமாவாசையை முன்னிட்டு பிப்ரவரி 21 வரை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர். கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை, வனத்துறை தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar