கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக்கொள்ளை விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் நேற்று மயானக் கொள்ளை விழா நடந்தது. காலை 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஏரிக்கரை மூளையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து கஞ்சுளி கபாலம் கையிலேந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மதியம் 3:00 மணிக்கு சுவாமி கோவிலை அடைந்தவுடன் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பருவதராஜகுல மரபினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.