பேரையூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு பேரையூர் பகுதிகளில் உள்ள சிவன் தலங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் குலதெய்வ கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குடும்பமாக தங்கி வழிபட்டனர். இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. பல்வேறு பகுதியில் இருந்து குலதெய்வம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோயில்களின் தங்கி விடிய விடிய வழிபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தேங்காய், வாழைப்பழம், சந்தனம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் கூட்டம் அலைமோதியது.