மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் ஒரு மணிக்கு கோவிலிலிருந்து அம்மன் மற்றும் சுவாமி வேஷங்களை அணிந்து கொண்டு மூங்கில்துறைப்பட்டு சுடுகாடு பகுதியில் சூரை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.