பதிவு செய்த நாள்
21
பிப்
2023
10:02
பழநி: பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் இன்று (பிப்.21.) கம்பம் சாட்டும் விழா நடைபெறும்.
பழநி, கோயில் நிர்வாகத்தின் உபகோயிலான மாரியம்மன் கோயிலில் (பிப்,.17ல்) மூகூர்த்த கால் நடுதலுடன் மாசி திருவிழா துவங்கியது. இன்று (பிப்.,21ல்) திருக்கம்பம் வைக்கும் நிகழ்ச்சியில், கம்பம் தயாரிக்க காணியாளர் அரிவாள் எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி, மாலை 6:30 மணிக்கு மேல் நடக்கும். அதைத் தொடர்ந்து கம்பம் தயார் செய்யப்படும். அதன்பின் கம்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வையாபுரி கண்மாய், அரசமரத்து வினாயகர் கோயில், படித்துறையில் கம்பம் அலங்கரிக்கப்படும். மாரியம்மன் கோயில் முன் கம்பம் நடப்பட்டு சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெற உள்ளது. பக்தர்கள், கம்பத்திற்கு பால், பன்னீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்வர். இரவு 11:00 குமார சமுத்திரம் மற்றும் அடிவாரம் அழகு நாச்சியம்மன் கோயிலில் சாற்றுதல் நடைபெறும். பிப்., 28 ல் இரவு 7:00 மணிக்கு மேல் கொடியேற்றம், கம்பத்தில் பூவோடு வைத்தல் நடக்கும். மார்ச.1ல் அடிவாரம், குமாரசத்திரம் அழகு நாச்சியம்மன் கோயில்களில் திருக்கல்யாணம் நடைபெறும். மார்ச்.,7 ல் மாலை 6:40 மணிக்கு மேல் மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணமும், மார்ச்.,8 ல் தேரோட்டமும் நடைபெறும். மார்ச்.,9 கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைய உள்ளது.