உச்சிப்புளி: உச்சிப்புளி அருகே அரியமான் செல்லும் வழியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. அங்குள்ள பிரத்தியங்கிரா தேவி தனி சன்னதியில் நேற்று காலை மாசி அமாவாசையை முன்னிட்டு ஹோமம் நடந்தது. உலக நன்மைக்கான கூட்டு பிரார்த்தனையில் பக்தர்கள் பங்கேற்றனர். மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.