Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாம்பல் புதன் : கிறிஸ்தவர்களின் ... மண்டைக்காடு பிரச்னையில் சுமூக தீர்வு இருதரப்பும் இணைந்து சமயமாநாடு மண்டைக்காடு பிரச்னையில் சுமூக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
நத்தம் மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

22 பிப்
2023
08:02

நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழாவையொட்டி கரந்தமலை கன்னிமார் தீர்த்தமாடி வந்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர்.

நத்தம் மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இதன் முக்கிய திருவிழாவான மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. பக்தர்கள் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து அங்கிருந்து புனித தீர்த்தக் குடங்கள் எடுத்து வந்து சந்தனக் கருப்பு கோயிலில் சேர்ந்தனர். நேற்று  பக்தர்கள் தீர்த்தக் குடங்களைத் தலையில் சுமந்த படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க மீனாட்சிபுரம், பஸ்நிலையம், மார்க்கெட் வீதி, பெரிய கடை வீதி வழியாக வந்து மாரியம்மன் கோயிலைச் சென்றடைந்தனர். பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. மாரியம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள்கள் விரதம் தொடங்கினர். தொடர்ந்து இரவு அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாகக் கொண்டு வரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்படுகிறது

இதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 24, 28 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் ஊர்வலமாக நத்தத்தின் முக்கிய வீதிகளில் நகர்வலம் நடக்கும். இந்த விழா நாள்களில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து அக்னிசட்டி எடுத்தல், மாவிளக்கு, கரும்புத்தொட்டில், அங்கப்பிரதட்சணம், அலகுகுத்துதல், அரண்மனைப் பொங்கல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். திருவிழாவின்  முக்கிய நிகழ்ச்சியான மார்ச் 7 தேதி கழுமரம் ஏறுதல், பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மறுநாள் அம்பாள், மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து அம்மன் கோயிலை சென்றடைவார்" அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நத்தம் மாரியம்மன் கோவில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை முன்னிட்டு கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வருவதற்கு வசதியாக நத்தத்திலிருந்து கரந்த மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கியதன் மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 400 வருவாய் கிடைத்ததாக நத்தம் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.,2ல் துவங்கி நவ., 7ல் சூரசம்ஹாரம், நவ., 8 திருக்கல்யாண உற்சவம் நடைபெற ... மேலும்
 
temple news
கோவை, மருதமலை சுப்ரமணியர் சுவாமி கோவில் மற்றும் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி காந்திமதி அம்மன் இன்று காலை பச்சை ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ 2.99 கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி ... மேலும்
 
temple news
தேவகோட்டை; ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar