Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 100 ஆண்டுகள் பழமையான ஆதிகும்பேஸ்வரர் ... வேலங்குடி திருவிழா : பக்தர்கள் கருப்பருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர் வேலங்குடி திருவிழா : பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் : தீமிதித்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் : தீமிதித்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

22 பிப்
2023
06:02

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா கடந்த 18ம் தேதி மகாசிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. 5ம் நாள் விழாவாக இன்று மாலை மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் வார வழிபாட்டு மன்றம் சார்பில் தீமிதி விழா நடந்தது. இதை முன்னிட்டு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்தனர். பகல் 3.30 மணிக்கு அக்கினி குளத்தில் இருந்து உற்சவர் அங்காளம்மன் வாத்தியங்கள் முழுங்க ஊர்வலம் புறப்பட்டது. மாலை 3.50 மணிக்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்கினி குண்டத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து சேலம் மாவட்டம் ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமகுரு ஆதினம் முதலில் தீக்குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து கோவில் பூசாரிகளும், காப்பு கட்டி விரதமிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர். சேலம், ஈரோடு, தர்மபுரி பகுதியை சேர்ந்த பெண் பக்தர்கள் சக்தி மாலை அணிந்து அதிக அளவில் தீக்குண்டம் இறங்கினர். முன்னதாக அம்மன் ஊர்வலமாக வந்த போது பக்தர்கள் அலகு குத்தி லாரியை இழுத்தும், பரவை காவடி மூலம் ஆகயாமார்க்கமாக அம்மனுக்கு மாலை அணிவித்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடிவேல், கண்காணிப்பாளர் வேலு, மேலாளர் மணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் மாவட்ட போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், சுகாதாரத்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, புதுச்சேரி, கடலுார், வேலுார் உட்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி காந்திமதி அம்மன் இன்று காலை பச்சை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ 2.99 கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி ... மேலும்
 
temple news
தேவகோட்டை; ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பெங்களூரு; லிங்கராஜபுரம் பகுதியில் கிராம தேவதை பூப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நிறைவு நாளான நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar