Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் அங்காளம்மன் ... காளஹஸ்தியில் கைலாச கிரிவலம் சென்ற சுவாமி அம்பாள் : பக்தர்கள் பரவசம் காளஹஸ்தியில் கைலாச கிரிவலம் சென்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலங்குடி திருவிழா : பக்தர்கள் கருப்பருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்
எழுத்தின் அளவு:
வேலங்குடி திருவிழா : பக்தர்கள் கருப்பருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பதிவு செய்த நாள்

22 பிப்
2023
06:02

கண்டவராயன்பட்டி: திருப்புத்தூர் அருகே வேலங்குடி சாம்பிராணி வாசகர் கருப்பர் கோயிலில் முதல்நாள் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்புத்தூர் அருகே வேலங்குடியில்  கருப்பர் கோயில் முதல்நாள் விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று நேர்த்திக்கடனாக அரிவாளை சார்த்தி வருகின்றனர். வேலங்குடியில் சாம்பிராணி வாசகர் உறங்காப்புளி கருப்பர் கோயிலில்  மகாசிவராத்திரியை முன்னிட்டு  திருவிழா  நடந்து வருகிறது. பிப்.15 ல் காப்புக்கட்டி விழா துவங்கியது.  தொடர்ந்து பக்தர்கள் கருப்பருக்கு விரதமிருந்து அர்ச்சனை செய்து வழிபட்டு வருகின்றனர். நேற்று பாரி வேட்டை முடிந்து இன்று காலை முதலாம் திருவிழா துவங்கியது.  கருப்பருக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அங்காள அம்மன் கோயிலிலிருந்து  உற்ஸவ அம்மன் புறப்பாடாகி கருப்பர்கோயில்  பச்சை வாழைக்குடிலில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் சுற்று வட்டாரக்கிராமத்தினர் நேர்த்திக்கடனாக அரிவாள், காவடி எடுத்து சார்த்தி வருகின்றனர். மாவிளக்கேற்றியும், தலை முடியும் இறக்கியும், கரும்பு தொட்டில் கட்டியும் நேர்ச்சை நிறைவேற்றுகின்றனர்.  பக்தர்கள் சாம்பிராணி அளித்து,   பச்சை வாழை படையலாக  கரும்பு, தேங்காய்,வாழைப்பழத்தை கருப்பருக்கு படைத்து அர்ச்சனை செய்கின்றனர். தொடர்ந்து மாலையில் சாமி அழைப்பு நடந்தது.  அங்காளம்மன் கோயில் வலம் வந்து கருப்பர் கோயில் வந்து சாமியாட்டம் நடந்தது. காலை முதல் பல இடங்களில் தொடர்ந்து அன்னதானம் நடந்து வருகிறது. நாளை இரண்டாம் நாள் திருவிழாவும், நாளை மஞ்சள் நீராடுதலுடனும் விழா நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி; செப்டம்பர் 07-ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை கோவில் வாசல்கள் செப்.,07ம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; காணை கிராமத்தில் நவதானியங்களால் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைத்து பொதுமக்கள் வழி ... மேலும்
 
temple news
கூடலூர்; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி ... மேலும்
 
temple news
குருவாயூர்; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar