கீழக்கரை : திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் பெருமாள் கோயிலில் மகா ஹோமம் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு, அனுஜ்ஞை பூஜையுடன் துவங்குகிறது. நாளை காலை 7 மணிக்கு ஒரு லட்சம் காயத்ரி மகாயக்ஞம், உலக அமைதிக்காக செப்.,16 காலை 7 மணிக்கு, விஷ்ணு சகஸ்ரநாம மகா ஹோமம், பகல் 12.30 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.