மங்கலதேவி கண்ணகி கோயில் மே 5 ல் சித்ரா பௌர்ணமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2023 07:03
கூடலுார்: தமிழக- கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் விழா மே 5ல் நடைபெற உள்ளதை தொடர்ந்து, அதற்கு முன்னதாக தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டரின் ஆலோசனைக் கூட்டம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தமிழக -கேரள எல்லை கூடலுார் அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு மே 5ல் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பாக தேனி, இடுக்கி கலெக்டர் தலைமையான ஆலோசனை கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்படும் முடிவுகளின்படி கொண்டாடப்படும். இந்த ஆண்டு கலெக்டர் அளவிலான அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் முன்கூட்டியே நடத்த வேண்டும் எனவும், தேக்கடியில் நடத்தி வந்த இக்கூட்டத்தை தற்போது தேனி மாவட்டத்தில் நடத்த வேண்டும் எனவும் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் வலியுறுத்தியுள்ளனர்.