Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 400 ஆண்டு பழமையான மடம் இடிப்பு: ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி பயணம் பாத யாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி பயணம் பாத யாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

20 மார்
2023
12:03

பல்லடம்; பருவாய் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், பொன்விழா ஆண்டு கடந்து, வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.

பல்லடத்தை அடுத்த பருவாய் கிராமத்தில், ஸ்ரீ வெள்ளியங்கிரி ஆண்டவர் பாதயாத்திரை காவடி குழுவினர், கடந்த, 1971ம் ஆண்டு முதல், வெள்ளியங்கிரி மலைக்கு மாலை அணிந்து சென்று வருகின்றனர்.  நேற்று முன்தினம், பொன்விழா கடந்து, 52வது ஆண்டாக பாதயாத்திரை புறப்பட்டனர். பருவாய் மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து, கும்மி ஆட்டம், காவடி ஆட்டம்  உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து அங்கிருந்து நடை பயணமாக, விநாயகர் கோவிலுக்கு சென்றனர். விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்த பின், பாதயாத்திரையாக வெள்ளியங்கிரி  மலைக்கு புறப்பட்டனர். குடும்பத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தர்களை வழியனுப்பி வைத்தனர்.

இது குறித்து குருசாமி ஈஸ்வரன் கூறுகையில், எனது தந்தை காலம் முதல் வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். பாதயாத்திரையை இன்று (நேற்று முன்தினம்) துவக்கி  ஆறு நாட்களில் வீடு திரும்புவோம். வெள்ளியங்கிரி மலை ஆண்டு சுனையில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தத்தை, பருவாய் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவோம். பங்குனி மாதம்  மேற்கொள்ளும் இந்த பாத யாத்திரையில், ஆண்டுதோறும் பக்தர்கள் அதிகரித்து வருகின்றனர். நடப்பு ஆண்டு, 120 பேர் பாதயாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.‌என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar