Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானைஸ்வரர் கோவிலில் பங்குனி ... சதுர்முக முருகன் கோயிலில் அமாவாசை பூஜை சதுர்முக முருகன் கோயிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பூக்குழி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பூக்குழி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

21 மார்
2023
10:03

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா வெகு சிறப்புடன் நடந்தது‌ இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13 நாட்கள் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த மார்ச் 10 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அமாவாசை நாளான இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி பெரிய மாரியம்மனை தரிசித்து, நகரில் உள்ள பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து, ரத வீதி சுற்றி வந்தனர். மதியம் 1:15 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, வீதி உலா துவங்கியது. இதனையடுத்து பக்தர்கள் தீ மிதிக்க துவங்கினர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தேனி, மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து பூக்குழி இறங்கி, தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்தினர். நகரின் பல்வேறு பகுதிகளில் தனி நபர்கள், பொது நல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர், மோர், குளிர்பானங்கள் வழங்கினர். விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, துணை ஆணையர் வளர்மதி மற்றும் பல்வேறு கோயில் செயல் அலுவலர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று மார்ச் 22 காலை 11 :15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானலில் வைகாசி விழாவையடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. கொடைக்கானல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கனியாக பரமேஸ்வரி ஜெயந்தியை ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க ரிஷப ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar