கன்னிவாடி: அமாவாசையை முன்னிட்டு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. திருமஞ்சன அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வாலை, திரிபுரை சக்தி அம்மனுக்கு, மகா தீபாராதனை நடந்தது.
* சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. உற்சவர் கோதண்டராமருக்கு, திரவிய அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
* சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில் உள்ளிட்ட இடங்களில் அமாவாசை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது