Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ... திருத்தணி முருகன் கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா துவங்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா துவங்கம்

பதிவு செய்த நாள்

27 மார்
2023
08:03

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் நேற்று காலை 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

முதல் நாள் நேற்று காலை ஏகாம்பரநாதர் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் 10 நாள் திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் தினசரி காலை இரவு சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும், 30ம் தேதி வெள்ளி அதிகார நந்தி சேவையும் அன்று இரவு ஸ்ரீகைலாச பீட ராவண வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்க இருக்கிறது. 31ம் தேதி காலை ஏகாம்பரநாதர் ஏழவார் குழலி அம்பாள் மலர் அலங்காரத்தில் முன்னே செல்வர். அறுபத்து மூவர் நாயன்மார்கள் பின் தொடர்ந்து நான்கு ராஜவீதிகளில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். வரும் 1ம் தேதி முக்கிய உற்சவமான திருத்தேர் திருவிழா நடக்கிறது. அன்று இரவு சுவாமிக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. 4ம் தேதி சபாநாகர் தரிசனம் நடக்கிறது. 5ம் தேதி அதிகாலை பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடக்கிறது. வரும் 7ம் தேதி காலை சர்வ தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்சவம், இரவு யானை வாகனத்தில் புறப்பாடுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar