Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை உத்தரவு பெட்டியில் துளசி, ... மருந்தீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி வாகனத்தில் சந்திரசேகரர் உலா மருந்தீஸ்வரர் கோயிலில் அதிகார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.23ல் துவக்கம்: மே 5ல் ஆற்றில் இறங்குகிறார் அழகர்
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.23ல் துவக்கம்: மே 5ல் ஆற்றில் இறங்குகிறார் அழகர்

பதிவு செய்த நாள்

29 மார்
2023
09:03

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.,23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மே 2ம் தேதியும், வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி மே 5ம் தேதியும் நடக்கின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.,23ல் காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் நடக்கிறது.

இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். ஏப்.,30ல் இரவு 7:05 மணி முதல் 7:29 மணிக்குள் அம்மனுக்கு பட்டாபிேஷகம் நடக்கிறது. மே 1ல் திக்குவிஜயம், மே 2ல் காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 3ம் தேதி காலை 6:00 மணிக்கு மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மே 4ல் மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. அதேநாளில் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் அலங்காரத்தில் மதுரை வரும் அழகரை வரவேற்று எதிர்சேவை நடக்கிறது. மே 5ம் தேதி வைகையாற்றில் தங்க குதிரை வாகனத்தில் அழகர் இறங்குகிறார்.

12 ஆயிரம் பேர் காண ஏற்பாடு: திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண ஆடி வீதிகளில் தகர ஷீட் பந்தல் அமைக்கப்படுகிறது. திருக்கல்யாண மேடையில் 300 டன் குளிர்சாதன வசதியும், திருக்கல்யாண மண்டபத்தில் 100 டன் குளிர்சாதன வசதியும் செய்யப்பட உள்ளது. 6 ஆயிரம் பேர் முன்னுரிமை அடிப்படையில் இலவச தரிசனமாக தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். 2500 பேருக்கு ரூ.500 கட்டண சீட்டு வழங்கப்படுகிறது. இவர்கள் வடக்கு கோபுரம் வழியாக செல்ல வேண்டும். 3500 பேருக்கு ரூ.200 கட்டண சீட்டு வழங்கப்பட்டு வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக இலவச பாஸ் கிடையாது. கோயில் வளாகம், வெளியே 20 இடங்களில் எல்.இ.டி., திரைகள் வைக்கப்பட உள்ளன. பக்தர்கள் வாகனங்கள் எங்கெங்கு நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து போலீசார் பின்னர் அறிவிப்பர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; துடியலூர், விளாங்குறிச்சி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும், 3,000 ஆண்டுகள் பழமையான கன்னியாகுமரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar