Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு அந்தணர்குறிச்சியில் ... வெள்ளி சூரிய வட்ட வாகனத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வீதி உலா வெள்ளி சூரிய வட்ட வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கங்கா ஆரத்தி: கங்கா மாதா வுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கங்கா ஆரத்தி: கங்கா மாதா வுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

29 மார்
2023
11:55

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாத விஷயங்களில் கங்கா ஆரத்தியும் ஒன்று. கடந்த வாரம் சார்ட் விசிட்டாக காசி போயிருந்த போது கங்கா ஆரத்தியை பார்க்க விரும்பி சென்றேன். காசியில் உள்ள கங்கை நதிக்கு நன்றிக் கடனாக தினந்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே கங்கா ஆரத்தி ஆகும். கங்கை புனித நதியாக உருவானவள். ஏழு புண்ணிய நதிகளில் முதலிடம் பெறுவது கங்கைதான். வபெருமானின் நெற்றிக் கண்ணில் உதித்த ஆறு தீப்பொறிகளும் வாயு மற்றும் அக்னி தேவரால் கங்கையில் சேர்க்கப்பட்டன. அதை கங்கா தேவி சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்ப்பித்ததால் ஆறுமுகப் பெருமான் அவதரித்தான். கங்கையில் நீராடினால் பாவங்கள் நீங்கி புனித மடையலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பெருமைகள் பல பெற்ற கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே கங்கா ஆரத்தி ஆகும். இந்த மாபெரும் பூஜை திறந்த வெளியில் கங்கைக் கரையில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பூஜையைக் காணவும், தரிசனம் செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் கூடுவது வழக்கம். ஒரே நேரத்தில், ஒரே மாதிரி ஆடை அணிந்த பூசாரிகளால் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக உயர்ந்த மேடைகளின் மேல் நின்று பூசாரிகள் நிதானமாக தூபம், தீபம், அலங்கார தீபம், புஷ்பம், சாமரம் போன்ற நானாவித உபசாரங்களுடன் கங்கா மாதா வுக்கு சிறப்பாகப் பூஜை செய்கிறார்கள். அந்த நேரம் பாடப்படும் ஆரத்தி பாட்டு என்பதும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

-எல்.முருகராஜ்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கும்பகோணம் அருகே வட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள கிரிகுஜாம்பிகையம்மன், பிறையணியம்மன் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: உலக நன்மைக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.கன்னியாகுமரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி உற்சவ விழா அக். 15 முதல் ... மேலும்
 
temple news
திருப்பதி : வரும் அக்.,28ம் தேதி சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.  சந்திர கிரகணம் காரணமாக அக்.,28 மாலை 7.05 மணி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் குருபூஜை விழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar