Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டத்துகாளியம்மன் கோவில் குண்டம் ... ராமநவமி சாய் ஜெயந்தி விழா : சாய்பாபா கோயில்களில் சிறப்பு ஆரத்தி வழிபாடு ராமநவமி சாய் ஜெயந்தி விழா : சாய்பாபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராம நவமி : பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு 2000 லிட்டர் பால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
ராம நவமி : பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு 2000 லிட்டர் பால் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

30 மார்
2023
12:03

புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில் ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமிக்கு 2000 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.

புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார். ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக "பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும் வளத்தையும் குறிக்கும் வகையில் "ஜய மங்களா என்றும் அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலில் பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இங்கு ராமநவமி உற்சவம் வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (30ம் தேதி), ராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. காலை 8:45 மணிக்கு பட்டாபிஷேகம், ராமச்சந்திர மூர்த்திக்கும், மூலவர் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கும் 2 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, கோவிலை வலம் வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. பின், சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது. இன்று மலை 4:30 மணிக்கு சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar