Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி உத்திர திருவிழா: பழநியில் ... பரமக்குடி பங்குனி திருவிழா கோலாகலம்: நாளை குதிரை வாகனம் பரமக்குடி பங்குனி திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் புஷ்வனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
திருப்புவனம் புஷ்வனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2023
10:04

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலமான புஷ்பவனேஷ்வரர் ஆலயத்தில் பங்குனி திருவிழா கடந்த ஞாயிறு அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அம்மனும் சுவாமியும் காலை, இரவு என இருவேளையும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று 8ம் நாளான திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மண்டபத்தில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளினர். பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிவிக்கப்பட்டது. முற்பகல் 11.30 மணிக்கு அம்மன் சார்பாக சிவராஜ் பட்டரும், சுவாமி சார்பாக அசோக் பட்டரும் மாலை மாற்றி கொண்டனர். பின் திருக்கல்யாண உற்சவம் பக்தர்களின் கரகோஷத்திற்கு இடையே வெகு சிறப்பாக நடந்தது. விழாவில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி குடும்பத்துடன் கலந்து கொண்டார். திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு திருமணமான பெண்கள் திருமாங்கல்ய கயிறு மாற்றி கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவம் நடந்த பின் மணமக்கள் பட்டர்கள் இருவரும் திருக்குடை ஏந்தி வீதியுலா வந்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அன்னதானம் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்று கிழமை என்பதால் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்வராணி என்பவரின் நான்கு பவுன் தாலி செயின் உட்பட மொத்தம் ஐந்து பெண்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகள் திருடு போயின. நகைகயை பறிகொடுத்த பெண்கள் போலீசாரிடம் அழுது புலம்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
சென்னை; சங்கரா கல்வி, மருத்துவ குழுமங்களில் பல ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றியவர்களுக்கு, காஞ்சி ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோிலான  திரௌபதி சமேத தர்மராஜ சுவாமி கோயில் ... மேலும்
 
temple news
திட்டக்குடி; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஜூலை 15ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.திருப்பதியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar