பதிவு செய்த நாள்
05
ஏப்
2023
07:04
48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருந்தால் பிறப்பு, இறப்பு சக்கரத்தில் இருந்து விடுபட்டு உயிர் மோட்சம் பெறும். இந்த நாளில் சூரியன் மீன ராசியிலும், சந்திரன் கன்னி ராசியிலும் இருப்பர். இருவரும் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையால் பார்த்துக்கொள்வர். எனவே இந்நாளில் விரதமிருப்போருக்கு உடல்நலம், தைரியம் கிடை க்கும்.
பங்குனி உத்திர நாளான இன்று இதை படித்தால் முருகனருளால் வாழ்வு சிறக்கும்.
* குன்று தோறும் குடிகொ ண்ட முருகனே !
சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த
சிவபாலனே ! வடிவே லனே ! கார்த்திகை
பெ ண்களின் அரவணைப்பில் வளர்ந்த
கார்த்திகே யனே ! அகத்தியருக்கு
உபதேசித்த குருநாதனே ! உன்
திருவடியை த் தஞ்சம் என வந்து
விட்டோம்.
* ஆறுபடை வீட்டில்
அமர்ந்திருக்கும் அண்ணலே !
திருத்த ணியில் வாழும்
தணிகாசலனே ! பழநி
தண்டா யுதபாணியே !
வாழ வை க்கும் கருணை
கடலே ! சிக்க ல் சிங்கா ர
வேலவனே ! மயில் வாகனனே !
சேவல் கொடி ஏந்தியவனே !
உன் சன்னதியில் அடைக்க லம்
புகுந்து விட்டோம்.
* சூரனை அழித்து தேவர்களை
காத்த வனே ! தேவசேனாபதியே !
தெ ய்வானை மணவாளனே !
அருணகிரிநாதருக்கு அருள்
புரிந்த வனே ! ஆறுமுகனே !
பன்னிரு கைகளால் வாரி
வழங்கும் வள்ளல் பெருமானே !
திருமாலின் மருமகனே !
ஆனை முகனின் தம்பியே !
குழந்தை தெ ய்வமே ! உன்னை
சரணடைந் து விட்டோம்.
* பார்வதி பெற்ற பாலகனே !
கந்தனே ! கடம்பனே !
கதிர்வே லவனே !
சிவசுப்பிரமணியனே !
செந்துார் முருகனே !
அவ்வைக்கு கனி கொடுத்தவனே !
மயிலே றிய மாணிக்கமே ! முத்துக்குமரனே !
சுவாமிநாதனே ! சரவணபவனே ! சண் முகனே !
தாயினும் சிறந்த தயாபரனே ! உன்னையே
சரண் என வந்து விட்டோம்.
* வேதம் போற்றும் வித்தகனே ! குகனே !
வள்ளி மணவாளனே ! பக்தர்க ள் உள்ள த்தில்
வாழ்ப வனே ! காங்கே யனே ! கண்கண்ட
தெ ய்வமே ! கலியுக வரதனே ! திருப்புகழ்
நாயகனே ! வாழ்வில் எல்லா வளமும் பெ ற்று
இன்ப முடன் வாழ வரம் தருவாயாக.
* முருகப்பெருமானை வழிபட்டால் காமம், குரோதம் உள்ளிட்ட தீய பண்புகள் மறையும். இதனையே அசுரர்களாக (சூரபத்மன், தாரகாசுரன்) சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
* சுப்பிரமண்ய அஷ்டகத்தை செவ்வாய் அன்று படித்தால் செவ்வாய் தோஷம் விலகும்.
* முருகனுக்கு வலதுபுற கைகளில் கோழிக்கொடி, வச்சிராயுதம், அங்குசம், அம்பு, வேல் ஆகிய ஆயுதங்களும், இடப்புற கைகளில் தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் ஆகிய ஆயுதங்களும் இருக்கும்.
* கந்த புராணத்தில் உள்ள சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் படித்தால் பாவம் பறந்தோடும்.
* முருக வழிபாட்டுக்கு ஏற்ற திதி சஷ்டி, நட்சத்திரம் கார்த்திகை, கிழமை செவ்வாய்.
* முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் ‘காங்கேயன்’ என பெயர் பெற்றார். சரவணப் பொய்கையில் அவதரித்ததால் ‘சரவண பவன்’ எனப்பட்டார். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் ‘கார்த்திகேயன்’ என்றும், பராசக்தியால் ஆறு உருவமும் ஒரே வடிவமாக ஆக்கப்பட்டதால் ‘கந்தன்’ என்றும் பெயர் பெற்றார்.