Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று பங்குனி உத்திரம் : முதல் ... பழநியில் பங்குனி உத்திரம் கோலாகலம்: ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் பரவசம் பழநியில் பங்குனி உத்திரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

05 ஏப்
2023
07:04

சென்னை,சென்னை, வடபழநியில் ஆண்டவர் கோவிலில் இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, 1ம் தேதி லட்சார்ச்சனை துவங்கியது. மூன்று நாட்கள் நடந்த லட்சார்ச்சனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

பங்குனி உத்திரமான நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது. பின், யாகசாலையில் பூர்ணாஹுதி பூர்த்தியானது. நண்பகல் மூலவருக்கு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் நடந்தது. இரவு, வடபழநி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடந்தது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, இன்று முதல், 7ம் தேதி வரை மூன்று நாட்கள், இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயண, நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. இன்று தெப்பத்தில் வடபழநி ஆண்டவர் புறப்பாடு நடக்கிறது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது. கோடை வெயில் அதிகம் காணப்பட்டதால் பக்தர்கள் வசதிக்காக நேற்று கோவில் முகப்பில், லாரி வாயிலாக தண்ணீர் தெளித்து சாலை குளிர்விக்கப்பட்டது. கோவில் வளாகத்திலும், ஆங்காங்கே குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

போரூர் பாலமுருகன் கோவில்: போரூர் ஈஸ்வரன் கோவில் தெருவில், பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று, பக்தர்கள் பால் குடங்களுடன், போரூர் -- குன்றத்துார் சாலையில் ஊர்வலமாக நடந்து சென்றனர். வாய், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தபடியும், பக்தர்கள் கோவில் வளாகத்திற்கு வந்தனர். அந்த பால்குடங்களை வாங்கி, முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, கோவில் வளாகத்தில் தொடர் அன்னதான திட்டத்தை துவக்கினார். பால்குடங்களை சுமந்து வந்த பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar