Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி மாதத்தில் பெருமாளை எப்படி ... திண்டுக்கல்லில் விநாயகர் ஊர்வலம் முஸ்லிம்கள் மரியாதை! திண்டுக்கல்லில் விநாயகர் ஊர்வலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் கருட சேவை: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 செப்
2012
10:09

நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவ விழாவின், ஐந்தாம் நாளான 22ம் தேதி இரவு, 9 முதல், 11 மணி வரை, கருட வாகனச் சேவை நடைபெறுகிறது. காலை, மோகினி அவதாரக் கோலத்தில், திருமலையின் நான்கு மாட வீதிகளிலும், உற்சவர் வலம் வருவார். இக்காட்சியைக் காண, லட்சக் கணக்கானோர் திருமலையில் குவிந்துள்ளனர். திருமலை தேவஸ்தான உண்டியலில், கடந்த, 18ம் தேதி, 1.96 கோடி ரூபாயும்; 19ம் தேதி, 2.6 கோடி ரூபாயும், பக்தர்கள் அளித்த காணிக்கை மூலம் வசூலாகி உள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர, மூன்று தங்கக் கிரீடங்கள், உண்டியலிலிருந்து எடுக்கப்பட்டன. சென்னையைச் சேர்ந்த, பெயர் வெளியிட விரும்பாத நகை வியாபாரி ஒருவர், மலையப்ப சுவாமிக்கு அணிவிக்க, மூன்று தங்கக் கிரீடங்களை தயார் செய்து, திருமலைக்கு கொண்டு வந்து, தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்க முயற்சி செய்துள்ளார். நிர்வாகத்தின் முன் அனுமதியின்றி தயார் செய்துள்ளதால், கிரீடங்களை பெற்றுக்கொள்ள அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து, மூன்று கிரீடங்களையும் அவர், கோவில் உண்டியலில் செலுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. கிரீடங்களின் மதிப்பை கணக்கிடவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். திருமலை மலைப் பாதையில், இரு சக்கர வாகனங்களுக்கு, நேற்று காலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர் கூட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, திருமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar