அவிநாசி செல்வ விநாயகர் கோவிலில் தீர்த்த குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2023 10:04
அவிநாசி: அவிநாசி கைகாட்டி புதூரில் உள்ள எக்ஸ்டென்ஷன் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் 53ம் ஆண்டு யுகாதி பண்டிகை தீர்த்த திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அவிநாசி கைகாட்டி புதூரில் உள்ள எக்ஸ்டென்ஷன் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் 53ம் ஆண்டு பங்குனி யுகாதி பண்டிகை தீர்த்த திருவிழா நடைப்பெற்றது. இதில்,அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்,பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டு, ஊர்வலமாக தீர்த்த குடம் எடுத்துச் செல்வ விநாயகர் கோவிலுக்கு சென்றனர். முன்னதாக கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதல்,சிறப்பு அபிஷேக ஆராதனைகள்,திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது.மாலையில் சாமி திருவிதி உலா வருதல், மஹா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.