பதிவு செய்த நாள்
17
ஏப்
2023
10:04
குன்னுார்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் பூ குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, இரு வாரங்களாக நடந்து வருகிறது. நேற்று நடந்த பூ குண்டம் திருவிழாவில். கோவிலில் அம்மன் ஊர்வலம் துவங்கி, வி.பி., தெரு மார்கெட் பூ குண்டத்தை அடைந்தது. விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூ குண்டம் இறங்கினர். முன்னதாக, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீர் பக்தர்களுக்கு ஊற்றப்பட்டது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் இளைஞர் மன்றம், லாரி உரிமையாளர்கள் தொழிலாளர்கள் சங்கம், அண்ணா பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சங்கம், விவேகானந்தர் நற்பணி மன்றம், தாசப் பளஞ்சிக இளைஞர் சங்கம் மற்றும் கோவில் எநிர்வாகம் சார்பில் அன்னதானம் உட்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பலரும் கை குழந்தையுடன் நேர்த்தி கடன் செலுத்தினர். வரும் (18ம் தேதி) முக்கிய தேர் ஊர்வலம், 21ம் தேதி முத்துப் பல்லக்கு, 22ல் புஷ்ப பல்லக்கு நடக்கிறது.