Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ... ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் திருவிழா: ராயம்பாளையம் குதிரை ஊர்வலம்
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் திருவிழா: ராயம்பாளையம் குதிரை ஊர்வலம்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2023
03:04

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு குதிரை ஊர்வலம் நடைபெற்றது. கடும் வெயிலிலும் பக்தி பரவசத்துடன் குதிரையை சுமந்த பக்தர்கள் வழிபட்டனர்.

ஆண்டு தோறும்,அவிநாசி கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு சின்ன கருணை பாளையம், ராயம்பாளையம் கிராமங்களில் இருந்து குதிரை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான, குதிரை ஊர்வலம்,கடந்த வெள்ளியன்று சின்ன கருணைபாளையத்தில் இருந்து ஆகாசராயர் கோவிலுக்கு பக்தர்கள் குதிரையை சுமந்து, சென்றனர். தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கொடியேற்றத்திற்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமை அன்று அவிநாசி அடுத்த ராயம்பாளையத்திலிருந்து குதிரையை அலங்கரித்து சுமந்து செல்வார்கள்.

இந்த ஆண்டுக்கான குதிரை ஊர்வலம் இன்று ராயம்பாளையத்திலிருந்து அப்பகுதி மக்கள், மூன்று குதிரைகளை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து சப்பரத்தில் கட்டி அப்பகுதி இளைஞர்கள் தோளில் சுமந்தபடி நடுவச்சேரி ரோடு, மடத்துப்பாளையம் ரோடு, சேவூர் ரோடு சந்திப்பு, கச்சேரி வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, கோவை மெயின் ரோடு மற்றும் மங்கலம் சாலை வழியாக ஊர்வலமாக சென்று ஆகாசராயர் கோவிலை அடைந்தனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் பக்தர்களுக்கு தண்ணீர், நீர்மோர், சர்பத் வழங்கி மாலை அணிவித்து வரவேற்றனர். ஆகாசராயர் கோவிலை சென்றடைந்தவுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகாசராயர் மற்றும் காத்தவராயருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள காத்தவராயருக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக கிடாய் வெட்டி வழிபட்டனர். இதில் ராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

குதிரையின் சிறப்பு: காலங்காலமாக ராயம்பாளையத்தில் இருந்து குதிரைக்கு ஊர் பொதுமக்கள் பங்களிப்பில், அருகில் உள்ள ஊரில் செய்து வந்தனர் .தற்போது, ஈரோடு மாவட்டத்தில், நம்பியூர் அருகே வேமாண்டம்பாளையத்தில்,குயவர் வேலை செய்து வரும் நபர் மூன்று குதிரைகளையும் செய்து தந்துள்ளார். மேலும்,கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக குதிரை செய்யும் பணி நடைபெற்று வந்தது. ஒவ்வொன்றும்,சுமார் 1100 கிலோ எடை கொண்ட குதிரையை, 5 கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் வெயிலையும் பொருப்படுத்தாமல் பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக செல்வார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நவராத்திரி திருவிழா, அக்., 3ல் காப்பு ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் பிரதான நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று வெகு ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நவராத்திரியின் இறுதி நாளான நேற்று, 30 அடி மகிஷா சூரன் வதம் செய்து பட்டாசு ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன், நவராத்திரி பெருவிழாவின் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar