ஏப். 20. ல் வெளிமுத்தி பழம்பதிநாதர் கோவிலில் லட்சதீபம் ஏற்றி வழிபட முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2023 05:04
தேவகோட்டை: தேவகோட்டை அருகே வெளிமுத்தி சிவன் கோவிலில் லட்சம் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.
ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட தேவகோட்டை அருகே உள்ளது வெளிமுத்தி பழம்பதிநாதர் கோவில். பாண்டிய மன்னன் திருப்புனவாசல் பழம்பதிநாதரை தினமும் வழிபடுவது வழக்கமாக இருந்துள்ளது. ஒரு நாள் போகிற வழியில் மன்னன் சோர்வாகி அயர்ந்ததால் வருந்திய மன்னனுக்கு சுவாமி வெளிப்பட்டு முத்தியாய் காட்சி கொடுத்ததால் இந்த தலம் வெளிமுத்தி என்றும் பின் இந்த இடத்தில் பெரியநாயகி சமேதராக பழம்பதிநாதர் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். நாடும் மக்களும் அமைதியாக நலமுடன் வாழ, எல்லா வளமும் பெற வேண்டி தேவகோட்டை பகுதியிலேயே முதன்முதலாக வரும் ஏப். 20 ந்தேதி மாலை 5 மணியளவில் கோவிலில் லட்சம் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். பக்தர்கள் விளக்கேற்ற வசதியாக கோவிலிலேயே அகல்விளக்குகள் வழங்குகின்றனர். சிறப்பு வழிபாட்டில் ஸ்ரீ வில்லிபுத்தூர் சடகோபராமனுஜ ஜீயர், கோயம்புத்தூர் பிரம்மரிஷி ஈஸ்வரன் குருஜி, அமராவதிபுதூர் சாரதேஸ்வரி பஇர்யம்பஆ பங்கேற்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ராணி ஆலோசனையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். தேவகோட்டையில் இருந்து ஓரியூர் செல்லும் ரோட்டில் 4 கி.மீ தொலைவில் வெளிமுத்தி உள்ளது.