பதிவு செய்த நாள்
18
ஏப்
2023
05:04
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.
கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று அதிகாலை பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, மாலை 4:30 மணியில் இருந்து நந்தி பெருமானுக்கு பிரதோஷ பூஜை நடந்தது. இதேபோல் கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு மற்றும் நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனுார், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், அரியபெருமானுார் ஆத்மஞான லிங்கேஸ்வரர். வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், கனங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், காரனுார் மீனாட்சி சிதம்பரேஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர், ஆலத்துார் திருவாலீஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சின்னசேலம்: சின்னசேலம் கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் மற்றும் தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில்களிலும், சித்திரை மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், மூலவர் சுயம்பு லிங்கம் மற்றும் நந்திபகவானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதேபோல், பாசார் பிரம்மபுரீஸ்வரர், மேலப்பழங்கூர் வேதபுரீஸ்வரர், சாத்தப்புத்துார் ஜோதிலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பழமை வாய்ந்த சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.