பதிவு செய்த நாள்
18
ஏப்
2023
05:04
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் காமாட்சி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் பால்குட உற்சவம் நடந்தது.
அருப்புக்கோட்டை பொட்டல்பட்டி, திருநகரம், செங்குந்தர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட காமாட்சியம்மன், வண்டி மலர்ச்சி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. கடந்த 14 ம் தேதி வெள்ளிக்கிழமை காப்பு கட்டி நிகழ்ச்சியோடு துவங்கிய விழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படியாரின் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். உறவின்முறை தலைவர் மாடசாமி, சென்னை செங்குந்தர் உறவின்முறை தலைவர் சுப்பையா, கௌரவ தலைவர் நடராஜன், மாரிமுத்து, தொழிலதிபர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். பால்குடம் கோயிலை அடைந்து வண்டி மலர்ச்சி அம்மனுக்கும், காமாட்சி அம்மனுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. முளைப்பாரி ஊர்வலம், தீச்சட்டி, கரக ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை 14 ஊர் செங்குந்தர் உறவின்முறை தலைவர் நடராஜன், செயலாளர் பழனிச்சாமி, நிர்வாகிகள் செய்தனர்.