பச்சாபாளையம் மாரியம்மன் திருக்கல்யாண உற்சவ திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2023 05:04
அன்னூர்: பச்சாபாளையம், மாரியம்மன் கோயில் பூச்சாட்டு, திருக்கல்யாண உற்சவ திருவிழா இன்று துவங்குகிறது.
பச்சாபாளையம் ஊராட்சியில், பெரியூர் பச்சாபாளையத்தில், பல நூறு ஆண்டு பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூச்சாட்டு மற்றும் திருக்கல்யாண உற்சவ திருவிழா இன்று துவங்குகிறது. இன்று மாலை 6:00 மணிக்கு அம்மன் அலங்காரம் செய்தல், நந்தா தீபம் ஏற்றுதல் மற்றும் பொறி சாட்டுதல் நடக்கிறது. இதையடுத்து 24ம் தேதி வரை தினமும் இரவு வழிபாடு நடக்கிறது. வரும் 25ம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நடக்கிறது. மே1 ம் தேதி வரை தினமும் இரவு கம்பம் சுற்றி ஆடுதல், பூவோடு எடுத்தல் நடக்கிறது. மே 2ம் தேதி இரவு பூ கரகம் எடுத்தலும், அம்மனுக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது. வரும் மே 3ம் தேதி காலை மாவிளக்கு ஊர்வலமும், அம்மன் அழைத்தலும் தீபாராதனையும் நடக்கிறது. இரவு கம்பம் பிடுங்குதலும் கங்கையில் இடுதலும் சிம்ம வாகனத்தில் அம்மன் உலா வருதலும் நடக்கிறது. மே 4ம் தேதி காலையில் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. பச்சாம்பாளையம், உருமாண்ட கவுண்டன்புதூர் உள்ளிட்ட 12 ஊர் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.