சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; வெயிலால் குறைந்தது பக்தர்கள் வருகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2023 05:04
வத்திராயிருப்பு,: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது. கோடை வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.
பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதி வறண்டு கிடப்பதால், எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்தனர். மதியம் 12:00 மணி வரை ஆயிரத்து 200 பக்தர்களே மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் மாலை 4:30 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.