சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பூசாரி கணேசன் தலைமையில் சுவாமிக்கு 11 வகையான திரவ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள் லிங்காஸ்டகம் பாடி சிவகோஷமிட்டனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர். சோழவந்தான் பிரளயநாயகி சமேத பிரளயநாதர் கோயிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து சுவாமி கோயிலுக்குள் உள்ள நான்கு ரத வீதியில் பக்தர்களின் சிவகோஷத்துடன் வீதியுலா புறப்பாடு நடந்தது. இந்நிகழ்வில் எம்.வி.எம். குழுமத்தினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதேபோல் திருவேடகம் ஏலவார்குழலி சமேத ஏடகநாதர், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர் கோயில்களில் நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பிரதோஷ வழிபாடுகள் நடந்தது.
கலெக்டர் ஷஜீவனா கூறும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்களின் தரிசன நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குடிநீர், கழிப்பறை, மருத்துவம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது, என்றார்.