பதிவு செய்த நாள்
18
ஏப்
2023
06:04
மேட்டுப்பாளையம்: பிரதோஷத்தை முன்னிட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, திருமஞ்சள், மஞ்சள், நெல்லி பொடி, அரிசி மாவு, நெய், தேன், பால் இளநீர், தயிர், பன்னீர், விபூதி உள்பட, பதினாறு வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தனர். பூசாரி ஜோதிவேலவன் சிறப்பு பூஜைகளை செய்தார். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட்டனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.