பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள எம்பெருமானார் தரிசன ஐக்கிய சபா சார்பில் ராமாநுஜரின், 1006வது திருநட்சத்திர திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, மங்களகிரி வாகனத்தில் ராமாநுஜர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று மாலை, 5:00 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, நாள்தோறும் சந்திர பிரபை, முத்து பந்தல், சேஷ வாகனம், பல்லக்கு சேவை, அலங்கார பல்லக்கு, சர்வ பூபால வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.