விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, இன்று (ஏப்ரல் 19) காலை 7:00 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணி வரை ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி உள்ளனர். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து தாணிப்பாறைக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.