ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2023 03:04
தஞ்சாவூர், கும்பகோணம் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, மூலவரான 11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பட்டு ஆடைகளை கொண்டு சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு குறைய வேண்டியும், கோடை வெப்பம் மற்றும் வறட்சியில் இருந்து மக்களை காக்க வேண்டியும், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் பக்தர்கள் மகா சங்கல்பம் செய்து கொண்டனர். தொடர்ந்து உற்சவர் ராமர், லெட்சுமணர், சீதை, அனுமருக்கு கவசம் அணிவிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் ராமன், மோகன் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.