அன்னூர்: அமாவாசையை முன்னிட்டு, அம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.
அன்னூர், ஓதிமலை ரோட்டில் உள்ள பழமையான பெரியம்மன் கோவிலில் காலை 11:00 மணிக்கு பால், நெய், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மதியம் அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னூர், தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலிலும், மதியம் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மூக்கனூர் சவுடேஸ்வரி அம்மன் கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வ நாயகி அம்மன் கோவில், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில், அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவ செல்வி அம்மன் சன்னதி உள்பட அன்னூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.