திண்டுக்கல்: அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் என். ஜி.ஓ. காலனி ஸ்ரீ முனீஸ்வரர் கோயிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 7:00 மணிக்கு பூஜை நடந்தது. மாலை 5:00 மணி முதல் நிர்வாகி கநாதன் தலைமையில் ர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான ர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அக்கரைப்பட்டி யாண்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மலை குகைக்கோயில், அடிவார கோயில்களில் மூலவருக்கு பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் ,விசேஷ மலர் அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடந்தது.
* சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், கோணிமலை முருகன் கோயிலில் அமாவாசை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.