குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திகடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2023 02:04
குன்னூர்: குன்னூரில், நகராட்சி சார்பில் நடந்த புஷ்ப பல்லக்கு உற்சவத்தில், பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினர்.
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் நடந்து வரும். சித்திரை தேர் திருவிழாவில் இன்று குன்னூர் நகராட்சியின், 61வது ஆண்டு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. குன்னூர் கிருஷ்ணாபுரத்தில் இருந்து துவங்கிய அபிஷேக பொருட்கள் ஊர்வலத்தில், பக்தர்கள் பல்வேறு நேர்த்திகடன் செலுத்தினர். இதில் நகராட்சி ஊழியர் ரங்கராஜ், முதுகில், அலகு குத்தி, அதில், இளநீர் காய்களை இழுத்தும், தீச்சட்டி ஏந்தியும், வேப்பிலை அலங்கார அம்மனை சுமந்து வந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. கோவிலில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வந்தார். அன்னதானம், இன்னிசை நிகழ்ச்சி, வானவேடிக்கை ஆகியவை நடந்தன. ஏற்பாடுகளை நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள், செய்திருந்தனர்.