அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2023 04:05
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை 9:30மணிக்கு ஹோமம், 10:30 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், 11:00 மணிக்கு மூலவர் லட்சுமி நரசிம்மர் தங்க காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் இரண்டாம் நாளான நாளை காலை 9:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மகாதிருமஞ்சனம், அலங்காரம், வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.