பதிவு செய்த நாள்
04
மே
2023
05:05
பழநி: பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில் திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது.
பழநி, மலைகோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.26-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் தினமும் சிம்ம வாகனம், சேஷ வாகனம், மரசப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை வாகனங்களில் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சங்கல்பம், புண்யாவாகனம், நடந்தது. சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. மே.,2ல் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சேஷ வாகனத்தில் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று (மே.4.) காலை 7:45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து, தேரோட்டம் ரதவீதியில் நடந்தது. மே.,5 வரை பத்து நாட்கள் சித்திரை திருவிழா நிறைவு பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் நடராஜன், நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம் சுப்புராஜ், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.