வத்தலகுண்டு: கிருஷ்ணாபுரம் அருகே அங்காள ஈஸ்வரி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு அங்காள ஈஸ்வரி கோயில் பங்காளிகள் சார்பில் புதிதாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயில் நிர்வாகஸ்தர் பிரபு தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குருக்கள் திருநாவுக்கரசு தலைமையில் குழுவினர் வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி, யாக வேள்வி நடத்தினர். தொடர்ந்து மதுரை அழகர் கோயில், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் மருதா ஆற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் கலசங்களின் கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சிவலிங்கத்திற்கு புனித தீர்த்தங்களால் அபிஷேகம் நடந்தது. 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. கோயில் பங்காளிகள், சுற்றுவட்டார கிராமத்தினர் பங்கேற்றனர். முன்னதாக நேற்று முன்தினம் பிரதோஷத்தை முன்னிட்டு புதிய சிவலிங்கத்திற்கு மருந்து சாத்துதல் எண்ணெய் காப்பு செய்தல் ஆகிய நிகழ்வுகள் நடந்தன.