சிவகாசி பத்ரகாளி அம்மன் கோயிலில் கயர் குத்து திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2023 06:05
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடந்த கயர் குத்து திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா மே. 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்மன் சிம்மம், காமதேனு, வேதாளம், கைலாச பர்வதம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். முக்கிய நிகழ்ச்சியாக 9 ம் நாள் திருவிழாவான இன்று கயர்குத்து திருவிழா நடந்துது. பக்தர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியும், தீச்சட்டி எடுத்து , உருண்டு கொடுத்து , மாவிளக்கு எடுத்து, கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்பிகை புஷ்ப பல்லுக்கில் எழுந்தருளி கோயிலுக்கு வந்தார். தொடர்ந்து தேர், அலங்காரம் காணப்பட்டது.